இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவொற்றியூர்
திருவொற்றியூர் சென்ற நாவுக்கரசுப் பெருமான் எழுத்து அறியும் பெருமானைத் தொழுது பாடிய பாடலாகும் இது.
மனமெனுந் தோணி பற்றி மதியெனும்
கோலை ஊன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட
லோடும் போது
மதனெனும் பாறைதாக்கி மறியும்போது
அறிய வொண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர்
உடைய கோவே.