பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

X 18. "இந்தியாவின் தென்னாட்டிலுள்ள ராஜ்யங்களை நோக்கி வருவதில் பிராமணர்கள் வெற்றியடைந் ததும், அங்குள்ள ஆந்திரர்,சேரர்,சோழர், பாண்டியர் ஆகிய எல்லாருடைய ராஜ்யங்களும் மிக்காகரீகமான நிலையிலிருப்பதைக் கண்டார்கள்" வின்ஸெண்ட் ஏ. ஸ்மித், க்ஸ் போர்ட் இந்திய சரித்திரம்'-(பக்கம் 14) 19. "ஆரியன் என்ற பதம் தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டும் பொருட்டு வேதப் பாக்களை இயற்றியவர்கள் கொடுத்துக்கொண்ட பெயரேயாம் அப்புராதனக் குடிமக்களை (தஸ்யூக்களென்று எழுதி வைத்தார் கேம்ப்ரிட்ஜ், கள்." "பழைய இந்தியாவின் சரித்திரம்" (1922) 20. "இந்திய ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்ததென்று நிச்சய மாய்ச் சொல்லலாம்.” இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர், வால்யூம்-1(1909) (பக்கம் 405) 21. "ஆரியரல்லாதவர்களை ரிக்வேதத்தில் "தாசர் என்றும், 'தஸ்யூக்கள்' என்றும், 'அசுரர்கள்'என் றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரிய ரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப் படையான பகைமையைப்பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமை யுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்" ராதா குமுத் முக்கர்ஜீ, M.A., Ph.D. இந்திய சரித்திர ப்ரொபஸர், லக்னோ சர்வகலாசாலை, "ஹிந்து நாகரீகம்"- (பக்கம்-69)