பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

என்னா லாவ தினி யொன்று மில்லை
என்று கூறினாள் எதிர்நின்ற சங்கிலி,
உண்டு முடிந்ததும் உள்ள கறியையும்
மீந்த சோற்றையும் வேலைக் காரிகள்
ஏந்தி வீட்டுக் கெடுத்துப் போயினர்.

31