பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

புன்னை அரும்புபோல் புதிதாய் முளைத்த
இரண்டு பற்கள் இல்லை என் றுரைத்தான்.
வீங்கிய உதட்டுநோய் தாங்கிலேன் ஒன்றான்.
உருண்டைச் சாணியை ஒருமுறை பூசினால்
மறு நொடி ஆறுமென்று மங்கை மருத்துவ
மறைநூல் வகுத்த வண்ணம் கூறினாள்
பிற காகட்டும் பிட்டைத் தின்பாய்
வேலைக் காரி விடிந்தபின் வருவாள்
பாலைக் காய்ச்சிப் பருகலாம் என்றாள்.
எட்டரை அடிக்கையில் இப்படிச் சொன்னாள்.

7