பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வாழை (சிறுகதைகள்) பேரறிஞர் டாக்டர் சி.எள். அண்ணாதுரை மனிதன் மறைவான். ஆனால் மனிதருள் மாணிக்கமாகத் திகழும் மேதைகள் படைத்த இலக்கியம் என்றுமே மறைவதில்லை. அது சாகாவரம் பெற்றது. வாழையடி வாழை யென வரும் திருக்கூட்டம் செய்யும் தவறைத் திருத்தும் பணியைத் தொடர்ந்து செய்துகொண் டிருக்கும் சக்தி அதற்குண்டு. அமரர் அண்ணாவின் பொற்காலக் கதை இலக் கியமும் அத்தகையதே. 'செவ்வாழை' கதையோடு கைகோர்த்து வரும் ஒவ்வொரு கதையும் நாட்டுக்குத் திறவு கோல் போன்றது. எனவே- சமூகத்தில் நெறியோடு வாழக் கற்றுக் கொடுக் கும் அண்ணாவின் சிறுகதையாம் நறுங்கனியை நீங்களும் சுவையுங்கள்; மற்றவர்களையும் சுவைக் கச் செய்யுங்கள். விலை ரூ.5.90 பூம்புகார் பிரசுரம் பிரஸ் 63, பிராட்வே. சென்னை-1.