பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



22 இறையனார் அகப்பொருள் (களவு செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும், கடாவிடுதலும், நிரைமேய்த்த லும் ; பண் - முல்லை. 'பிறவும்' என்றதனால், தலைமகன் பெயர் - குறும்பொறை நாடன் ; தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி; (இப் பெயர் மருத நிலத்துத் தலைமகட்கும் உரிய ;) பூ - முல்லையும், தோன்றியும் ; நீர் - கான்யாறு ; ஊர் - பாடியும், சேரியும்; மக்கள் பெயர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனப்படும். மருதத்துக்குத், தெய்வம் - இந்திரன் ; உணா - செந்நெல்லும், வெண்ணெல்லும்; மா - எருமையும், நீர்நாயும் ; மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும் ; புள் - நீர்க்கோழியும், தாராவும் ; பறை - மணமுழவும், நெல்லரி கிணையும் ; செய்தி - நெல்லரி தலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக் களை கட்டலும் ; யாழ் - மருதயாழ். 'பிறவும்' என்றதனால், தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன் ; தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி ; பூ - தாமரைப்பூவும், செங்கழுநீர்ப்பூவும் ; நீர் - மனைக்கிணறும், பொய்கையும்; மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர், உழத்தியர் ;