இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பரிப் பெருமாள்
59
அப்பாடல் :-
'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பருதி பரிமேலழகர்-திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்(கு) எல்லையுரை செய்தார் இவர்' என்பதாம்.
இப்பாடலகத்துக் குறிக்கப் பெற்ற 'கவிப்பெருமாள்' என்பவர் பரிப்பெருமாளேயாவர்.
ஊர்: பரிப்பெருமாள் "செழுவை" என்ற ஊரினர். இதனைக் காமத்துப்பால் இவருரை இறுதியிற் காணும் செய்யுளால் அறியலாம்.
அப்பாடல் வருமாறு:-
தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார் ஒள்ளிய காமநூல் ஒர்ந்துரைத்து-வள்ளுவனார் பொய்யற்ற முப்பாற் பொருளுரைத்தான் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து.
இதிற்காணும் தென்செழுவை, பாண்டி மண்ட்லத்துச் சேது நாட்டின் கண்ணது. கி.பி. 1268-இல் பட்ட மேற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன்,' பழுதறு சிறப்பின் செழுவைக் காவலன்' என்று கூறப்படுகின்றான். இதனானும் செழுவை பாண்டியராட்சிக் குட்பட்ட தோரூர் என்று அறியலாம்.
இவர் நூல்கள்: மேற்காட்டிய "தெள்ளிமொழியியலை" என்ற பாடலால், இவர் "மொழியியல்" நூல் (சொல்லிலக்கணம் கூறும் நூல்) உரைத்தார் என்றும், 'காமநூல்' ஒன்றையும் செய்தார் என்றும் அறியப்