பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதியமான் அனுப்பிய தூதர்

45

கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன என்று கூறினார். அதனால் அதியமான் படைகள் போரிற் பலகாற் பயன்படுத்தப்பட்டவை ; பகைவர் படைகளைத் தாக்கித்தாக்கிப் பழுதுற்றவை; மீண்டும் போர்வரின் பயன்படவேண்டும் என்பதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் வந்து குவிந்துள்ளன என்று புலப்படுத்தி அவனுடைய போராற்றலையும் படை வலியையும் பழிப்பது போன்று குறிப்பாகப் பாராட்டிய மூதாட்டியாரின் அரசியல் நுண்ணறிவை என்னென்று போற்றுவது! இவரைத் தலையாய தூதர் வரிசையில் ஒருவராக மதிப்பதில் தடையும் உண்டோ ?