பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இலக்கிய அமைச்சர்கள் பெருக்கால் கண்கள் நீர் சொரியவும் பவளவாய் குழற வும் யானும் என் கணவரும் செய்த் தவத்தை என் னென்பேன்! என்று கூறி மீண்டும் வணங்கினர். அரசியாரின் சிவப்பற்றையும் அன்பு வெள்ளம் பெருகும் சிந்தையையும் கண்ட காழிவள்ளல், சுற்றி லும் பரசமயம் சூழ்ந்திருக்கவும் சிவத்தொண்டு செய்து நிற்கும் தங்களைக் காணவே இங்கு வந்தோம்," என்று அன்புரை வழங்கினர். இங்ங்னம் பாராட்டி அரசியா ருக்கு விடைகொடுத்தனுப்பிய பின்னர், ஆலவாயில் தொண்டு புரியும் அடியவரெல்லாம் பிள்ளையாரை வணங்கி, ' இந்நாட்டில் பரவும் சமணிருள் கெடு மாறு தாங்கள் வந்தருள யாங்கள் பெருந்தவம் செய் தோம்,' என்று பேசினர். அமைச்சர் விருந்துட்டல் இக்காட்சிகளையெல்லாம் கண்டு களிப்புற்றுக் கொண்டிருந்த அமைச்சர், ஞானசம்பந்தர் தங்குதற் கெனக் குறித்த திருமடத்தைக் காட்டி அங்கு உறையு மாறு செய்தார். அரசியாரின் அருளால் சம்பந்தப் பெருமானுக்கும் அவரைச் சார்ந்த அடியார்கட்கும் குலச்சிறையர் சிறந்த முறையில் விருந்துட்டினர். திருமடத்தில் சமணர் தீக்கொளுவுதல் திருஞானசம்பந்தருடைய வருகையைக் கண்ட சமண் குண்டர்கள் அனைவரும் இரவில் ஒருங்கு திரண் டனர். பாண்டியனிடம் சென்று பதைபதைப்புடன் தம் சமயத்திற்கு வந்த கேட்டை விளக்கினர். அவ னுடன் சூழ்ந்து சம்பந்தர் தங்கிய திருமடத்தில் தீக் கொளுவத் தலைப்பட்டனர். அவர்கள் மந்திர வலியால்