பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுந்தர மூர்த்திகளது காலம் சைவ சமயகுரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் அறுபான்மும்மை நாயன்மார்களுள் இறுதியில் வாழ்ந்தவ ரென்பது அவர் திருவாய்மலர்ந்தருளிய திருத்தொண் டத்தொகையால் நன்கு விளங்குகின்றது. அப் பெரியார் இந் நிலவுகில் வாழ்ந்த காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதி என்று தஞ்சை ராவ்பகதூர் K. S. சீநிவாசபிள்ளை அவர்கள் தமது ' தமிழ் வரலாறு' என்னும் நூலில் கூறியுள்ளார், திருவாங் கூரில் கல்வெட்டிலாகாவிற்குத் தலைவராயிருந்து காலஞ்சென்ற T. A. கோபிநாதராயர் அவர்கள் அவ்வடிகளது காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகு தியாகு மென்று 'செந்தமிழ்' மூன்றுந்தொகுதியில் வரைந்துள் லார். ஆகவே, இவ்விரு ஆராய்ச்சியாளரும் சற்றேறக் குறைய ஒத்த கொள்கையினர் ஆவர் என்பது வெளிப்படை இனி, அடிகள் காலத்தை ஆராய்த்து காண்டற்கு இன்னோர் எடுத்துக்கொண்ட கருவிகள் நிரலே ஆராய்ந்து அவற்றின் வன்மை மென்மைகளாக் காண்பாம். சேரமான்