பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அடங்கிக்கிடந்த ஓம்மை அடுக்களையில் வைக்கவில்லை
விடமுண்(ட) நீலகண்டன் விடையேறி ஈஸ்வரனாம்
அசந்து படுத்த அந்த அருணாசலம் போல-நீர்
அசந்து படுக்கையிலே சுமந்து நின்ற மகளல்லவா”

என்று பாடுகிறாள். எப்படி பாட்டு? இனிமேயாவது ஒங்க அண்ணனுக்கு உரைக்கான்னு பார்க்கலாம்? ஏம்மா பேசமாட்டக்கிய ? எதுவும் தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க, ஒங்களோட இந்த நிலைமையில இதைப் பேசியிருக்கப் படாதுதான். ஆனால் இந்த கலைஞன் இருக்கானே அவனுக்கு சோறு வேண்டாம். தண்ணி வேண்டாம். அந்தரங்க சுத்தியோட சொல்லுததை கேக்கதுக்கு ஒரு ஆளு கிடச்சால் போதும். படுவாப்பய மவன் விட மாட்டான்.” மணிமேகலை 'கூத்து’ கோவிந்தனை ஏறிட்டுப் பார்த்தாள். களங்கமில்லாத முகம். அதைவிட களங்கமில்லாத நெஞ்சம். சிறிது தலையை ஆட்டி சிந்தித்துவிட்டுக் கேட்டாள்.

"அந்த மாத்திர எங்க கிடைக்கும்?"

தூத்துக்குடில கிடைக்கும். மாத்திர பேரு ஒங்க தம்பிக்கும் தெரியும். நம்ம ரத்துனத்தோட அய்யாவுக்கும் இப்பிடித்தான் வந்துது. வேளா வேளைக்கி மருந்து கொடுத்து, இப்போ அவரு சடுகுடு ஆடுவேன்னு சொல்றாரு நான் வரட்டுமா? அப்பாவுக்கு எப்படியாவது அந்த மாத்திரைய வாங்கி எப்படியாவது கொடுங்கம்மா. நாளைக்கி என்னோட சந்திரமதி கூத்த பாக்க வாரதுக்கு மறந்துடாதிய நிச்சயமா அழுதுடுவிய.”

"நான் கூத்த பாத்துட்டுதான் அழணுமா ?”

கூத்து கோவிந்தன் அவளையே பார்த்தான். அவள், அவனுக்குப் புதிய சந்திரமதி போலவும், பழைய சீதை