பக்கம்:இல்லற நெறி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் #95

சமயம் செயற்கைமுறைகளில் கருச்சிதைவு செய்யவேண்டி யும் நேரிடலாம்.

வலிப்பு: இந்நோய் பெரும்பாலும் முதல் கருப்பத்தின் பொழுதுதான் வருகின்றது; சிலருக்கு இரண்டாவது, மூன் ருவது பிரசவங்களின்பொழுதும் நேரிடலாம். இதனைப் பிரசவ சன்னி. குதிரை வலிப்பு, கருப்ப இசிவு என்ற பெயர் களாலும் வழங்குவர். கருத்தரித்த முதல் ஆறு திங்களுக் குள் இந்நோய் தோன்றுவதில்லை; ஏழாவது திங்களுக்குமேல் தான் இது தோன்றுகிறது. சில சமயங்களில் பிரசவவேதனை தொடங்கும்பொழுதும், பிரசவித்த பின்னரும் இந்நோய் வருவதுண்டு: இன்னும் இந்நோயின் காரணம் தெளிவாக அறியக்கூடவில்லை.

இந்நோய் ஏற்படுவதற்குமுன் கில அறிகுறிகள் தோன் தும்; சில வாரங்களுக்கு முன்னரே குருதியழுத்தம் அதிகரித் தல், சிறுநீரில் புரதம் காணப்பெறல், கால் முகங்களில் வீக் கம் காணல்-இந்நோயின் முதல் அறிகுறிகளாகும். இவற் று டின் தலைவலி, கன்களே இருட்டிக்கொண்டு வருதல்,மேல் வயிற்றில் குத்தல் வலி, தூக்கமின்மை போன்ற சின்னங் களும் தோன்றும். காலதாமதமின்றி மருத்துவரை நாடி அவர் செய்யும் முறைகளே அலட்சியம் இன்றிக் கருத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்; தகுந்த சிகிச்சையில்ை கருப் பிணிக்கு இறப்பு நேரிடாது பாதுகாக்கலாம். பிரசவ சன்னி யில் பிறக்கும்குழவிகள் பெரும்பாலும் இறந்தேபிறக்கலாம்: குழந்தை வெளிவந்தவுடன் வலிப்பும் குறைந்துவிடும்.

கருக்குழலில் கருப்பம்: இதனைக் கருப் பையின் வெளியே கருப்பம் என்றும் கூறுவர். சாதாரணமாக முட்டையணுவும் விந்தணுவும் கருக்குழலில் சந்தித்துக் கரு வுறும் என்றும், கருவுற்ற முட்டை கருக்குழலின் வழியாகக் கருப்பையில் இறங்கி அங்கு ஒரிடத்தில் தன்னைப் புதைத்துக்

52. 3055&paşā āū5thulb-Tubal Pregnancy: 53. கருப்பையின் வெளியே கருப்பம் - Extrauterine pregnancy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/201&oldid=597980" இலிருந்து மீள்விக்கப்பட்டது