இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இளந்தமிழா
வாழ்க்கையிலே சமத்துவமும்,
மனத்தினிலே உயர்நோக்கும், மாட்சிமிகும் அறநெறியும் ஆட்சிசெயப் போரிடுவாய்.
அனைவருக்கும் பொதுஉரிமை:
அனைவருக்கும் பொதுநீதி: அனைவருக்கும் பொதுஉடைமை ஆக்கிடவே தோள் புடைப்பாய்.
மக்களெலாம் ஒர்குலாம்:
மாநிலமே ஒருவீடாம்
தக்கநெறி இதுகண்ட
தமிழன் நீ மறவாதே.
இளந்தமிழா எழுந்திரடா!
இன்பமெலாம் கொணர்ந்திடுவாய் வளம்பெருக்கி வையகத்தை வானாடாய்ச் செய்திடுவாய்.
குறிஞ்சி மணம் - மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு உரியதாகக் கூறப்படும் காதல் மணம்.
பாரிகொடை - பாரி என்னும் வள்ளலின் கொடைத் திறமை புகழ்பெற்றது.
மக்களெலாம் ஒர் குலமாம் மாநிலமே ஒரு வீடாம் . யாதும் ஊரே, யாவரும் கேளிர்.