பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழியர் சங்கம் 161 ஊழியர் சங்கத்தில் சேர்ந்தவர் மிகச் சிலரே. பலர் அக் காலத்தில் வெளிப்படையாக அரசியல் எதிர்ப்புக் கழகங் களில் பங்கு கொள்ள அஞ்சுவர். நானும் என் நெருங்கிய நண்பர்கள் சிலருமே அச்சங்கத்தை அமைத்தோம். அவர் களுள்ளும் தலைவராக முன்னின்று அச்சங்கத்தை நடத்த ஒருவரும் முன் வரவில்லை. என்றும் அமைதியாக இருந்த என் உள்ளத்தில் எப்படியோ ஒர் உணர்ச்சி புகுந்தது. 'நானே தலைவனுக இருந்து நடத்துகிறேன்' என்று இசைந்து முன் நின்றேன். பள்ளியில் படித்த இரண்டு ஆண்டுகளிலும் அதன் தலைவனுக இருந்து ஒல்லும் வகை பணியாற்றினேன். பல அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டேன். இன்று மாணவரை அரசியலில் சேரக்கூடாது என்று கூறும் அதே தலைவர்கள் அன்று அனைவரையும் பள்ளியிலிருந்து வெளி யேறச் சொன்னர்கள். நான் அவ்வாறு வந்ததற்காக தண்ட னையும் பெற்றிருக்கிறேன். குடும்பத்தில் உள்ள ஆதரவற்ற சூழ்நிலையையும், நானே முயன்று முன்னேற வேண்டிய முயற்சியையும், பிறவற்றையும் மறந்து, நாட்டு விடுதலை ஒன்றையே முன்னிறுத்திப் படிப்பைக்கூட விட நி னை த் து விட்டேன். எனினும் ஒரளவு ஆசிரியர் தந்த தண்டனை களை யேற்று அமைந்து பயின்றேன். துய கதராடையே அன்று நான் உடுத்துவது. பின் என் மணநாளிலே கூட அத்தகைய கதர் ஆடைகளையே மணப் பரிசாகப் பெற்றேன். நான் அன்றுதொட்டுக் காங்கிரசில் உறுப்பினனுகவும் இருந்தேன். எனினும் சில ஆண்டுகள் கழித்து . 1938ல் என்று நினைக்கிறேன் - செங்கற்பட்டு மாவட்டக் கழக தேர் தலில் நான் நெடுநாளைய காங்கிரஸ்காரன் என்ற காரணத் தால் தள்ளப்பட்டு, அன்று புதிதாகக் காங்கிரஸில் சேர்ந்த ஒருவரைக் காங்கிரஸ் அபேட்சகராக அவர்கள் தேர்ந் தெடுத்த அந்த நாள் வரை நான் காங்கிரஸ்கார்னகத்தான் இருந்தேன். பிறகு என் வாழ்வு நெறி அறிவுத் துறையில்