பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இளமையின் நினைவுகள் அவரை வெறுத்தேன். என்ருலும் இன்று அவர் எனக்கு நல்ல வரம் கொடுத்தவர் என நினைக்கின்றேன். அவர் அப்படித் தடுத்திருக்காவிட்டால், அதை அறிந்த அன்னை எ ன் னை க் கட்டுப்பாடு செய்திராவிட்டால் நான் அந்த வேடிக்கைகளையெல்லாம் விட்டுச் சற்று கல்வியில் கவனம் செலுத்தி இருக்கமுடியாது. கண்டவர்களோடு கூடி ஒரு வேளை மற்றவர்கள் பழக்கத்திலுள்ள பீடி பிடித்தல், பொடி போடுதல் முதலியவற்றில் பழகி நான் வேறுவகையில் மாறி இருக்கவும் கூடும். அவர் தம் எச்சரிக்கையும், அதன் வழி உண்டான அம்மாவின் கட்டுப்பாடும் என்னை ஒரளவில் மனிதனுக்கின என்னலாம். ஆகவே இன்றும் அந்தப் பெரியவருக்கு ஒரு வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டிருக் கிறேன்.