பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魯聲

திருக்குர்ஆன் ஒரே வாரத்தில் ஒதி முடிக்க வசதியாக ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகள் ஒவ் வொன்றுக்கும் மன்ஸில்' என்று பெயர். அவ்வாறே, ஒரு மாதத்தில் ஒதி முடிக்க வசதியாக முப்பது பகுதிகளாகப் பிரிக் கப்பட்டுள்ளது. அப்பகுதி ஒவ்வொன் றுக்கும் என்று பெயர். நாளைக்கொரு ஜூஸ்உ வீதம் முப்பது நாளில் ஒதி முடிக்கலாம்.

§ - 3. ஜூஸ் உ

திருக்குர்ஆனில் மொத்தம் 6666 வசனங்கள் உள்ளன. அவை 86,430 சொற்களில், 3, 22,671 எழுத்துகளைக் கொண்டவை. திருமறையில் இடம் பெற்றுள்ள மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கை 1, 05, 68.4 ஆகும். 1400 ஆண்டுகளாகியும் திருக்குர்ஆனில் ஒரு புள்ளிகூட மாற்றப்படவோ திருத்தப் படவோ நீக்கப்படவோ இல்லை. இத னால் அன்று முதல் இன்றுவரை திருத் தப்படாத திருமறையாக திருக்குர்ஆன் விளங்கி வருகிறது.

குர்பான்: குர்பான் என்ற சொல்லுக் குப் பலியிடுதல்' என்பது பொருளா கும். കൂ1്,ഇജ് மாதம் பத்தாம் நாளன்றும் அதைத் தொடர்ந்து வரும் தஷ்ரீக் நாளும் குர்பானி கொடுக்கும் நாட்களாகும். ஆடு, மாடு, ஒட்டகை கள் ஆண்டவனுக்காக அறுத்து பலி யிடப்படும்.

இறைவன் தன் திருமறையில் குர் பாணி' கொடுப்பதை ஒவ்வொரு வகுப் பினருக்கும் கடமையாக்கி இருக்கி றோம் (22:24) என்று கூறியுள்ளான். இதிலிருந்து இறைவனுக்காக பிராணி களைப் பலியிடும் பழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்துள் ளது என்பது தெளிவாகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் நபி இப்ரா ஹீம் (அலை) கனவு கண்டு மகனைப்

குலாம் காதிறு நாவலர்

பலியிடத் துணிந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாகும்.

குர்பானியை அல்லாஹ்வின் பெய ரால் கொடுக்க வேண்டும் என இறை மறை கட்டளையிடுகிறது. பலியிடப் படும் உயிரின் இறைச்சியோ, இரத்த மோ இறைவனைப்போய்ச் சேருவ தில்லை. மக்களின் பக்தியும் இறை வனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தன் மையுமே இறைவனைச் சென்றடை கின்றன.

குலாம் காதிறு நாவலர்: மிகச்சிறந்த இ ஸ் லா மிய த் தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தவர் குலாம் காதிறு நாவலர். இவர் பெரும் புலவராக மட்டுமின்றி, மிகச் சிறந்த நாவன்மை படைத்தவ ராகவும் விளங்கினார். இவருடைய நாவன்மை மிக்கச் சொற்பொழிவுகள் மக்களைப் பெரிதும் ஈர்த்து மகிழ் ஆட்டின.

நாகூரில் 1833ஆம் ஆண்டில் குலாம் காதிறு பிறந்தார். இவர் தந்தை தமிழ்ப் புலமையும், மருத்துவ அறிவும் மிகுந்தவராவார்.

பன்னிரண்டு வயது முடியும் முன்னரே திருக்குர்ஆன் முழுமையும் ஒதினார். தமிழ் நூல்களில் பாண்டித்தியமும் பெற்றார். தந்தையார் இறந்தபின், பெரிய தந்தையாரின் அரவணைப்பில் வாழ்ந்தார். இக்கால கட்டத்தில் தமிழ் நூல்களைத் தாமாகவே கற்கலானார். நாராயணசாமி என்பவர் இவர் தமிழ்க் கல்விபெறப் பெரிதும் துணை நின்றார். அவரும் காலமாகிவிடவே இவர் திருசிர புரம் சென்று, மகாவித்துவான் மீ ன ா ட் சி சுந்தரம்பிள்ளையிடம் தொடர்ந்து தமிழ்க்கல்வி பெற்றார். அப்போது இவருக்கு வயது இருபத் தெட்டாகும்.

இஸ்லாமிய ஞானமும் தமிழ்ப்புலமை யும் நிரம்பப் பெற்ற பின்னர் படைப்