இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
202
ஈரோடு மாவட்ட வரலாறு
| மாம்பாடி | - | எதிரனூர் |
| சத்திமங்கலம் | - | கஸ்பாபேட்டை |
| கொற்றனூர் | - | சங்கரண்டாம்பாளையம் |
சில ஊர்கள் பேச்சு வழக்கில் திரிந்து வழங்குகின்றன.
| பார்ப்பதி | - | பாப்பினி |
| கூவலூர் | - | கூகலூர் |
| பிரமதேயம் | - | பிரமியம் |
| கொல்லன் கூவல் | - | கொல்லங் கோயில் |
| உலகவிடங்கம் | - | ஓலகடம் |
| கொடுமணம் | - | கொடுமணல் |
| ஆதவூர் | - | ஆதியூர் |
| வெள்ளக்கல் | - | வெள்ளகோயில் |
| புகழ்மங்கலம் | - | பழமங்கலம் |
| வள்ளி எறிச்சில் | - | வள்ளியறச்சல் |
| குழாம்நிலை | - | கொளாநல்லி |
| கற்றான் காணி | - | கத்தாங்கண்ணி |
| நீலம் பேரூர் | - | நீலம்பூர் |
| பரன்சேர்பள்ளி | - | பரஞ்சேர்வழி |
| புன்றுறை | - | பூத்துறை |
| ஈர்ந்தூர் | - | ஈங்கூர் |
ஈரோடு மாவட்டத்தில் கொங்குச் சோழர், பாண்டியர் நாளில் வேதம் வல்ல அந்தணர்கட்கு ஒரு வளமான ஊரை அடுத்தோ அல்லது புதியதாகவோ அங்கிரகாரங்கள் ஏற்படுத்தி, வாழ்க்கை வசதி செய்து தரப்பட்டன. அவற்றில் ஒன்று கூட இப்போது வழக்கில் இல்லை; அவ்விடத்தில் அந்தணர்களும் இல்லை. அரசன், அரசியர், அரசியல் தலைவர்கள் பெயரால் அவை அழைக்கப்பட்டன.
கத்தாங்கண்ணியில் | - | வீரசோழச் சதுர்வேத மங்கலம் |
வைரம்பள்ளியில் | - | உத்தமசோழ சதுர்வேத மங்கலம் |
ஈரோட்டில் | - | மூவேந்தசோழர் சதுர்வேத மங்கலம் |
எழுநூத்தி மங்கலத்தில் | - | எல்லாம்வல்ல சோழச் சதுர்வேத மங்கலம் |