பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

ஈரோடு மாவட்ட வரலாறு


26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.

27. குரங்கன்பள்ளம் கொம்பணையில் பள்ளத்தின் கீழ்ப்பாலத்தில் காலிங்கராயன் கால்வாய் செல்லுவது.

28. காவிரித்தோற்றத்தின் அரிய சிற்பம் இருப்பது (சாத்தம்பூர்)

29. கொங்கு நாட்டின் நான்கு பட்டக்காரர்களும் இருப்பது.

30. வடதமிழ்நாட்டில் முதல் விடுதலை வீரன் தீரன் சின்னமலை. (17.4.1756- 31.7.1805) பிறந்தது.

31. உலகின் மிகப்பெரிய மண் அணை இருப்பது (கீழ்பவானி அணை)

32. தந்தை பெரியாரைத் தந்தது.

இன்னும் பலப்பல.