பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


இருவண்ணக் கொடியைக் கையில் பிடித்து 'திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க! திராவிட முன்னேற்றக் கழ்கம் வளர்க என்று குரலெழுப்பிச் செல்வதற்காகச் சீரணிப்படை அமையவில்லை. இப்படையைக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிலையில் தி. மு. கழகம் இல்லை. அப்படியென்றால் 1966 ல் அல்லவா இதனை ஆரம்பித்திருக்க வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்னர் இதைச் செய்திருப்பதற்குக் காரணமே மக்கள் நலப் பணிக்காகத்தான்.

எந்தச் சாரர் ஆயினும் சரி, எந்த மக்களாயினும், என்ன குறையாயினும் என்னிடத்திலோ என் நண்பர்களிடத்திலோ தாராளமாக வந்து சொல்லலாம். நாங்கள் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

நான் இங்கே உட்கார்ந்திருக்கும்போது உங்கள் சட்டையிலே பூச்சி இருக்கிறது--தட்டி விடுங்கள்" என்று பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வாரானால் "இது எனக்குத் தெரியாதா?" என்றா கேட்பேன்? சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூடத் தெரியாமல் போகலாம்.

கோட்டையிலே வீற்றிருக்கும் எங்களுக்கு மக்களின் குறைகள் என்னென்ன என்று தெரிந்து விடும் என்று எண்ணியிருந்துவிடாமல் அப்போதைக்கப்போது உள்ள குறைகளை எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிக் கூறும்போது ஒவ்வொரு நாணயத்துக்கு உபகரணங்கள் இருப்பது போல ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டென்பதை மனதிற்கொண்டு கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

குடிநீர்த் தட்டுப்பாடு இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகும். ஐந்தாறு லட்சம் பேர் வாழ்ந்த சென்னைக்கென்று வகுக்கப்பட்டது, இப்போதுள்ள தண்ணீர்த் திட்டம். இப்போது 22 லட்சம் பேர் இந்நகரில் வாழ்கிறார்கள்.