இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அக்கமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி. ஆடேலோ ரெம்பாவாய். 14
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஒவா நெடுக்காரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனேயாள் விண்ணுேரைத் தான்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும் (பணியாள்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்த
வாருருவப் பூண்முலையிர் வாயார காம்பாடி (கர்தாள் ஏருருவப் பூம்புனல்பாய்க் தாடேலோ ரெம்பாவாய். 15
முன்னிக் கடலேச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி கந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்டுமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோரெம்பாவாய். 16
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்ாம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி கந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனே
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
கங்கள் பெருமானேப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்க் தாடேலோ ரெம்பாய். 17