பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை க. தமிழும் தமிழ்ப் பணியும் இமிழ்கடல் வரைப்பில் இனிமை சான்ற தமிழ்மொழி பேணுந் தகைசால் ஐயன்மீர் ! அன்னைமீர்! செந்தமிழ்த் தெய்வச் சீர்நலம் போற்றுதலே தன் முழு நோக்கமாக மேற்கொண்டு திருவருட்பாங்கால் தோன்றிய இக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினான் காம் ஆண்டுத் திருவிழாவில் யான் தலைமைபெறத் தந்தது, சிறியேன் மாட்டு இச்சங்கத்தார் வைத்துள்ள பேரன்பின் பெருமையையே விளக்குவதாகும். இது காறும் நிகழ்ந்த ஆண்டு விழாக்களில் தலைமை பூண் டோர் புலவர், புரவலர், அமைச்சர், பொருளாளர் என்னும் தகுதியினராவர். இன்ன தகுதியுள் ஒன்

  • கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பதினான்காம் ஆண்டு விழாத்

தலைமைப் பேருரை.