பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உலகப் பெரியார் காந்தி



உலவுமானால், எத்தனை கோட்சேக்கள் கிளம்புவாரோ என்பதை எண்ணும்போதே நெஞ்சு திடுக்கிடுகிறது.

மக்களை நல்லவர்களாக்க வேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி. ஜாதி, ஆணவம், சுயநலம், ஆதிக்க எண்ணம் ஒழிந்தாகவேண்டும், என்று பேசி வந்தபோதும் நாட்டை மீட்கவேண்டும் என்று அவர் அன்னியருடன் போரிட்டபோதும் கிளம்பாத பயங்கரச் சக்தியொன்று கிளம்பியது, கோட்சே உருவில், அதுதான் மத ஆதிக்கவெறி! அதனால் கொலையுண்டார்.

தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு. அதைப்

புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக, அழகிய மலர்ச்செடிகளுக்கான விதைகளைத் தூவ அங்கு சென்றபோது, புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வதுபோல், நாட்டை மீட்டு, நல்லாட்சி அமைத்து, மக்களை நல்வர்களாக்குவதற்காகக் கருத்தை பரப்பும்போது, கோட்சே கிளம்பினான். இந்தப் பழியைத் துடைத்தாக வேண்டும். பாரெங்கும் பேசுவர், நாட்டை மீட்டுத்தந்த உத்தமனை, உள்நாட்டு மத ஆதிக்க வெறி கொன்றது என்று.

மேட்டினைப் பூந்தோட்டமாக்க விதை கொண்டு வந்த வேளையில் பாம்பொன்றினால் இறந்த தோட்டக்காரனைக் கண்டு புலம்புவதும், பாம்பை அடித்துக் கொல்வதுமட்டுமல்ல, குடும்பத்தாரின் கடமை. இறந்து கிடப்பவரின் கரத்திலே உள்ள விதையை எடுத்துப் பார்த்து விம்மி விம்மி அழுதானபிறகு, இவைகளைத் தூவி இங்கு பூந்தோட்டம் காண விரும்பினார், அவர் மறைந்தார், விதையோ இருக்கிறது, இதோ, இதைத் தூவுவேன், இதோ இருக்கிறது, பூந்தோட்டம் காண்பேன், அந்த உருவில் அவரைக் காண்பேன், அந்த மணத்திலே அவர் பெருமை தெரியக் கண்டு மகிழ்வேன்,