பக்கம்:உலகு உய்ய.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உலகுக்கு ஒரே அரசு

உலக ஒற்றுமை:

உலகம் ஒன்றுபடவேண்டும் - உலகுக்கு ஒரே அரசு வேண்டும் - என்பது உலக அறிஞர்களின் ஆவல். இது அன்று மட்டுமன்று - இன்று மட்டும் அன்று - என்றுமே இருக்கும் ஆவல். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், சாதியாலும் சமயத்தாலும் பல பிரி வினரா யிருப்பினும், தமிழர் என்னும் பொதுப் பெயரால் ஒன்றுபடுகின்றனர். பல மொழியினர்க்கு நடுவில் இவர்கள் தம்மைத் தமிழர் என்னும் பெயரால்தான் தெரிவித்துக் கொள்ளவேண்டும். இதுபோலவே, தமிழன், தெலுங்கன், குசராத்தி, வங்காளி முதலியோர், பிறநாட்டினரின் நடு வில் இந்தியர்' என்னும் பொதுப் பெயரால் ஒன்றுபடுவர். இந்தியன், சீனன், பர்மியன் முதலியோர், பிற கண்டத் தார்களின் நடுவிலே ஆசியர்" (ஆசியாக் கண்டத்தினர்) என்னும் பொதுப் பெயரால் ஒன்றுபடுவர். ஆசியன், ஐரோப்பியன், ஆஃபிரிக்கன், அமெரிக்கன், ஆஸ்திரேலியன் ஆகிய எல்லாக் கண்டத்தாரும் ஒன்றுபடின், உலகம் ஒன்று பட்டதாகப் பொருள் அல்லவா? இந்த ஒற்றுமையை ஒரே அரசு - ஒரே ஆட்சி உலகம் முழுதும் பரவின் உண்டாக்கக் கூடும். அல்லது, வேறுகோள் (கிரகம்) ஆகிய 'செவ்வாய்க் கோள் போன்ற மண்டலத்திலிருந்து நம் உலகுக்கு எதிர்ப் புத் தோன்றுமாயின், எல்லாக் கண்டத்தார்களும் பூவுல கத்தார் (பூமியார்) என்னும் பெயரால் ஒருவேளை ஒன்று

படலாமோ என்னவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/248&oldid=544904" இலிருந்து மீள்விக்கப்பட்டது