பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ♦ அறிஞர் அண்ணா



தெரியாமல் -- நானும் கருத்திருமனும் மக்கள் முன்னாலே தெரிந்து கொண்டிருப்போமேயானால் அரசியல்வாதிகள் மட்டும் மக்கள் முன்னாலே தெரிந்து கொண்டிருப்போ மானால், அரசியலில் வேகம் இருக்கலாம் அரசியலில் விருப்பு வெறுப்பு காணலாம் -- ஆனால், நாட்டு முன்னேற்றத்தில் நிச்சயம் தயக்கம் ஏற்படும்.

ஆகையினால்தான், பஞ்சாயத்துக்களிலே -- பஞ்சாயத்து யூனியன்களிலே பணியாற்றுகின்ற -- நீங்கள், வெறும் அரசியல்வாதிகளாக உங்களை ஆக்கிக் கொள்ளாமல் கருதிக் கொள்ளாமல் -- நாட்டுக்கு நிரந்தரச் செல்வத்தைத் தேடிக் கொடுக்கக் கூடியவர்களாக உங்களைக் கருதிக் கொண்டு, அந்த முறையில் பணியாற்று வீர்களேயானால் -- இந்த நாட்டின் முன்னேற்றத்தை வெகு எளிதாகவும், வெகு விரைவாகவும் நாம் பெற்று அளிக்க முடியும்.

(அறிஞர் அண்ணா: ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மாநாட்டில்: 1969ல்.)


29. போர்குறித்து புகழ்ப்பாட்டு

கொலு இருக்கும்
கோவை அல்ல!

என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறார். போர் குறித்த புகழ்ப்பாட்டு என்றால், கொலு இருக்கும் மன்னனை பற்றித்தான் மற்றவர்கள் பாடியிருக்கிறார்கள் -- இது நாள்வரை, நான் அப்படி அல்ல!

குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்,
தாங்கொணாப் பாரந்தனைத்
தூக்கித் தத்தளிப்போன்