பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 107



கோவைக்கு வந்திருந்தால், படித்தவர்கள் பட்டாளம் -- பண்பாளர் --திருக்கூட்டம் -- கழகத்தின் பக்கத்தில் அணிதிரண்டு நிற்கும் காட்சியைக் கண்டிருக்கலாம்."

--கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தில்
ஆற்றிய ஆங்கில உரையில்


மனமிருந்தால் மார்க்கம் ஏற்படாதா?

"ஏழை எளிய பாட்டாளிகள், வேலை செய்யும் இடங்களிலேயே குடியிருந்தால்தான் வசதியாக இருக்கும்; கோடம்பாக்கத்தில் குடியிருந்து கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கியோ -- வண்டி இழுத்தோ, ஒரு ரூபாய் -- எட்டணா கூலி பெறும் ஏழை எப்படி வீட்டுக்கும் -- வேலை செய்யும் இடத்துக்கும் போய்வர முடியும்?

தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழில் செய்யுமிடங்களிலேயே பல அடுக்குக் கட்டடங்கள் கட்டி அளிக்கலாம்; இப்படிப்பட்ட குடியிருப்பு விடுதிகளைக் கட்ட அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் தொழிலதிபர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் போடலாம்.

தொழிலதிபர்கள் பணம் போடுவதால் அவர்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை; தொழிலாளர் நிம்மதியாக வாழ்ந்தால், தொழிலும் இலாபகரமாக நடைபெறும்.

தொழில் நல்ல முறையில் நடக்கிறது என்றால், தொழிலதிபர்கள் பணம் போடுவதில் தடை என்ன இருக்க முடியும்?

பம்பாய்--கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில், மாடிக் கட்டடங்களில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்; வீடு கட்ட நிலமில்லை -- இடமில்லை' என்று சொல்லுவதில் பொருளில்லை.

வானத்தில் எட்டியமட்டும் சொந்தமிருக்கிறது; எனவே, இருக்கின்ற நிலத்தில் வானமளாவிய மாடிக்