பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துரை

தத்துவக் கவிஞர் குடியரசு
துணைப் பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.


ஏழைக்கு எத்தனையோ
         பெயர்கள் உண்டு:
இழிஅடிமை, தொழிலாளி,
        கூலிக்காரன்,
தாழ்குலத்தோன், தீண்டாதோன்,
         ஒதுக்கப் பட்டோன்,
சேரிமக்கள். என்றழைக்கப்
         படுவோர் ஏழை!
கோழைக்குப் பிறந்தவர்போல்
        தென்பட் டார்கள்;
குப்பத்தில் குப்பையாகக்
        கிடக்கும் கூட்டம்;
வாழவழி அற்றவரை
        வாழ வைக்க,
வரலாற்றைப் புதுப்பித்தார்
       அறிஞர் அண்ணா!
பொதுவாழ்வைத் தொழிலாளர்
         வாழ்வுக் காக