பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 57



தொழிலாளர்கள் நல்ல பலம் பெற்றால், தாங்கள் ஈடுபட்டுள்ள பணிகளில் மேலும் அவர்கள் தெம்புடன் உழைப்பார்கள்; மனமும், உடலும் மகிழ்ச்சியாக இருந்தால் தான், உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், செல்வம் வளரும்.

தொழிலாளர் நலனுக்காக எவ்வளவு செலவிட்டாலும், அது சமூகத்துக்கு ஒன்றுக்கு ஒன்பதாகத் திரும்பி வரும்! அவர்களுக்குச் செலவிடப்படும் தொகை ஒரு நாளும் நட்டக் கணக்கில் வருவதில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், கடமை--கண்ணியம்--கட்டுப்பாடு என்ற மூன்று கோட்பாடுகளை வைத்திருப்பது போலவே தொழிலாளர்களுக்கும் அது தேவை என்று சொல்கின்றார்கள்; உண்மையாகவே, 'தொழிலாளர்களுக்கும் அது தேவை' என்று உணர்ந்திருப்பதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

கடமை

பாட்டாளிகளுடைய கடமை--சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலேதான் இருக்கிறது!

கண்ணியம்

அவர்களுடைய கண்ணியம்--தங்களுடைய சக்தியைப் பாழ்படுத்திக் கொள்ளாததிலே தான் இருக்கிறது!

கட்டுப்பாடு

அவர்களுடைய கட்டுப்பாடு--தங்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்கு யார் எந்த மாதிரி முயற்சி எடுத்துக் கொண்டாலும் ஒரு துளியும் இடம் கொடுக்காத தன்மையிலே இருக்கிறது!

(அறிஞர் அண்ணா--கட்டுரை ஒன்றில்)