பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கவியரசர் முடியரசன் படைப்புகள் : சொல்லுரைசேனாவரையம் கற்ப தற்கும் சொல்லுதற்கும் அரிதென்று வல்லார் சொல்வர்: வல்லவரந் நல்லுரையை வடித்துக் காட்டி மாணவர்க்கு விளக்குங்கால், மறைந்து நின்று பல்லமயம் அவ்விளக்கங் கேட்டுக் கேட்டுப் பாராட்டி ரா.ராகவையங் காரும் சொல்லியது கேட்டுள்ளோம் வசிட்டன் வாயாற் புகழ்ந்ததற்பின் சொல்லுதற்கும் உண்டோ சொற்கள்? H இலக்கணத்தை உலைக்களமென் றிரும்பு லக்கை என்றெல்லாம் எள்ளிநகை செய்வாருண்டு: விலைக்கரும்பைப் பிழிந்தெடுக்கும் ஆலை என்றும் விளையாட்டு மொழிபேசும் சிலரும் உள்ளார் உளக்கருத்தைச் சொலுமுரிமை எவர்க்கும் உண்டால் ஒரளவே தெரிந்தவர்தாம் உளற லாமோ? நிலைக்கிரங்கி நிற்பதலால் வேறென் செய்வோம்? நிகழ்காலம் இகழ்காலம் ஆயிற் றந்தோ Q இவரிடத்துக் கற்றவர்தாம் இலக்கணத்தை எள்ளிநகை செய்ததையாங் கண்ட தில்லை. எவரிடத்துக் கேட்டாலும் வியந்து நின்றே ஏற்றமுற மொழிவதைத்தான் கேட்ட துண்டு: தவறிழைக்கத் துணிவாரோ தமிழை ஆய்ந்தோர்? தமிழிவர்பாற் பயில்கின்ற பேறு பெற்றோர் உவகைக்கோர் எல்லையில்லை; அரிய ஒன்றிங் குற்றதுபோல் அவருளத்தில் நிறைவு காண்பார். 1() மாணவன்போல் ஆசான்றன் திறத்தை யெல்லாம் அளந்தறிய வல்லவொரு கருவி இல்லை காணுமிவர் ஆற்றலுக்குச் சான்று காட்டக் கற்றவர்தாம் தருமொழியில் ஒன்று போதும்: பேணிஅவர் தருமொழிகள், பாடஞ் சொல்லும் பெருமையினை நன்கெடுத்து விளக்கிக் காட்டும். பூணுமுயர் அன்புணர்த்தும் அவர்தம் வாழ்வு பொலிவுபெற வழியுரைத்த அழகுங் காட்டும். 11 பண்டிதமணி வகுப்பறையிற்பாடஞ் சொல்லுங்கால் இரா.இராகவையங்கார் பக்கத்தறையில் மறைந்திருந்து கேட்டு மகிழ்ந்து பாராட்டியதுண்டு. "மாணவர் இவரிடம் கற்றவர்)