84
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
அறையின் மேற்புறத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து அறிந்துகொண்டேன்.
நானும் அதே 'டிக்கெட்'டை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு உள் நுழைந்தேன். அவள் இருக்கைக்குப் பக்கத்திலேயே இடமும் கிடைத்தது. ஆண்டவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தேன். கடைமுழுக்கன்று கண்ட வருத்தக்குறியைக் காணவில்லை. மலர்ச்சி தான் இருந்தது. உதட்டின் சிவப்பும், கண் மையின் கருப்பும் இயற்கை அழகை அதிகப்படுத்திக் காட்டின. அவை நாகரிக நாரீமணிகள் அணியும் வண்ணப்பூச்சுகளின் ஒத்துழைப்பு.
அவளைப் பார்ப்பேன். அவள் பார்த்தால் திரையைப் பார்ப்பேன். இப்படியாக இருந்ததே ஒழிய, பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருந்தாலும் கண்கள் பேசிக் கொண்டு தான் இருந்தன. அவளோடு எப்படிப் பேசுவது - பேசினால் விடை தருவாளோ என்னவோ என்ற அய்யம் ஊசலாடிக் கொண்டிருந்தது. பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “மணி என்ன ஆகிறது” என்று தயவாகக் கேட்டேன்.
“9-25 ஆகிறது” என்று சிறு சிரிப்போடு கலந்து விடை தந்தாள்.
எனக்கு ஒரே மகிழ்ச்சி.
படம் ஆரம்பம் ஆயிற்று. படத்தையும் பாவையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே வந்தேன். இடையே அவள் பேசத் தொடங்கினாள்.
“பாருங்கோ சார்! இளம் பெண்களைக் கிழவனுக்குப் பிடித்துக் கட்டிவைத்துவிட்டு, அவள் எப்படியோ தவறு