பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேராதூன் பள்ளியில் பயின்ற போது, தமிழில் நால் நிறத்திற்கே சொற்களுண்டென்று பேராசிரியர் தெ. பொ. மீ. கூறியதாகக் கிளீசன் துரை வகுப்பிற் சொன்னதும்; அப் பேராசிரியரின் சென்னை மாணவியர் Bank என்ப தற்குத் தமிழ்ச் சொல் 'பாங்கி' என்று வகுப்பில் எழுந்து அத் துரைமகனார்க்கு விடையிறுத்ததும்; பேரா, சீகண் டையா ஹொன் என்னும் கன்னடச் சொல் பொன் என் னும் தமிழ்ச் சொல்லின் திரிபென்று மாணவர்க்குக் கூறிய போது, வண்ணனை மொழியியல் வகுப்பில் வரலாற்று மொழியியலைப் புகுத்தல் தகாது என்று பேரா. தெ. பொ. மீ.கண்டித்ததும், தமிழில் எட்டு வேற்றுமையும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றினவென்று கால்டு வெல் தவறாகக் கூறியதை மறுக்காது, அதையே தேற் மஞ் செய்து வடநாட்டுத் தமிழ் மாணவர்க்குத் தமிழைப் பற்றித் தாழ்வான எண்ணம் படுமாறு அவர் கற்பித்ததாக நான் கேள்விப்பட்டதும் மிக வருந்தத்தக்க செய்திகளா கும், வேனிற் பள்ளி முடிந்தபின் அண்ணாமலை நகர் திரும்பினேன். பர். சட்டர்சியின் அ.ம.ப.க. மொழியியல் துறைத் திறப்புவிழாத் தலைமையுரை, பின்னர் நீட்டியுங் கூட்டி யும் வரையப்பட்டு வெளியிடப் பெற்றது. அது பகுதிய ளவில் (Demy Size) சிறு குக்கில் (Small Pica) எழுத்தில் 34 பக்கங்கொண்டது. அதில், அவர் தமிழைப் பற்றிய தம் மதிப்பீட்டைப் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார். "உண்மையில் கழக (சங்க) இலக்கியமென்னும் பழந்தமிழிலக்கியப் பகுதிகளை நான் முதன் முதல் (ஆங்கில மொழி பெயர்ப்பு வாயிலாய்ப்) படித்தபோது, சமற்கிருத இலக்கியத்திலும் மறைவில்லாது அதன் சூழ் வெளிக்கு அல்லது வட்டத்திற்கு உட்பட்ட பிற இந்திய இலக்கியத்திலும் இல்லாத புதுமையை அஃது அளித்