நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 93
வண்ணங்கள் மாறும்; மேலும்
வர்ணசா லங்கள் தோறும்
எண்ணங்கள் மீறும்; எங்கும்
இனிமையின் இனிமை பூக்கும்;
பண்ணிசை அருவி வெல்லும்
பாய்ந்திடும் நயாக ராவின்
தண்மதி கணக்கில் லாமல்
தாகத்தைத் தீர்க்கும் அம்மா! (4)
அற்புதத் தின்மேல் ஓங்கு
அற்புதம் கண்டேன்! வாழ்வின்
பொற்பதங் கண்டேன்! பாக்கள்
பூரித்துப் பொங்கென், நெஞ்சச்
சொற்பதங் கண்டேன்! வையச்
சுகம்கண்டேன்! மீண்டும் வந்தே
அற்புதம் நிகழ்த்துவேன் ஆம்!
அற்புதம் தானே வாழ்வு! (5)
உச்சிமேல் வானி டிந்து
ஒழுகுதல் தானோ? இல்லை
மெச்சுதல் கால தேவன்
விழிநீரை வடிக்கின் றானோ?
முச்சங்கத் தமிழ்ப்பெருக்கோ?
முனிந்தெழு தமிழர் ஓர்நல்
பச்சைநல் தமிழர்நா டாக்கப்
பாய்ந்தெழு உணர்ச்சி தானோ? (6)
கற்கண்டுப் பாலா மோ?பார்
கவிஞனின் படைப்போ எந்த
விற்கொண்டே எய்த தாலே
வியற்பிற்கே எல்லை யாக
பற்கொண்டே இயற்கைத் தாயாள்
பதைத்திடச் சிரிக்கின் றாளோ?
பொற்பென்னே என்னே என்று