பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

155



இதைவிட இன்னொரு செய்தியையும் முக்கியமாக தெரிவித்தேன். தமிழக அரசின் அறநிலையத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான மெய்கண்டதேவன், அந்த துறையில் இருந்து மாற்றப்பட்டார். இவர் தமிழ் வழிபாட்டில், அளப்பரிய நம்பிக்கை கொண்டவர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டவர். இப்படி அறநிலையத் துறையோடு முழுமையாக ஒன்றிப்போன நேர்மையாளரான மெய்கண்ட தேவன், தமிழ் வழிபாடு, தமிழ் கல்வி வற்புறுத்தப் படும் போது, கலைஞர் அரசால் மாற்றப் பட்டிருப்பது கன்டணத்துக்கு உரியது என்றேன். இதனால், நான் பிரச்சனையிலிருந்து விலகிப் போவதாக அமைப்பாளர்கள் மத்தியில் ஒரு சின்ன சலசலப்பும், என் கருத்துக்கு ஆதரவாக கூட்டத்தினர் மத்தியில் பெரிய ஆரவாரமும் ஏற்பட்டன.

இரண்டாவதாக, கவிஞர் சாலய் இளந்திரையன் அவர்கள் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாலாம் தேதி காலமானார். கலைஞரின் வீட்டிற்கு இரண்டு வீதிகள் தள்ளி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு எதிர்ப்பக்கம் உள்ள திருவீதியான் தெருவில் வாழ்ந்து வந்தவர். டில்லி பல்கலைக்கழக வேலையில் இருந்து சுயஓய்வு பெற்று, தனது துணைவியார் சாலினியுடன் தமிழகத்தில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்ற நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் தமிழறிஞர்கள் கூட அவரை அதிகமாக கண்டுக்கவில்லை. இவரது பேச்சின் தீவிரத் தன்மையைக் கண்டு பல தமிழ் அறிஞர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். எனது வளர்ப்பு மகள் நாவலை டில்லி பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைத்தவர்.

என்றாலும், எனக்கும் அவருக்கும் தத்துவார்த்த ரீதியில் ஒத்துப் போனது இல்லை . எம்.ஜி.ஆர் காலத்தில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் இவரது துணைவியார் எனது கதையைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது எனக்கு ஆழ்ந்த வருத்தம். அதிலிருந்து நேரில் பார்த்தால் கூட ஒதுங்கிக் கொள்வோம். ஆனாலும், நிழல் முகங்கள் என்ற நாவலில் சாலையாரைப் பற்றி சிறப்பாக குறிப்பிட்டு இருந்தேன். இதனால், ஒருநாள் தொலைபேசியில் எனக்கு நன்றி சொல்லவில்லை என்றாலும் அந்த நாவலைப் பற்றி விசாரித்தார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சாலய்யார் மீது கும்பகோணம், சென்னை என்று பல்வேறு இடங்களில் வழக்குகள்