பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏邸名 லா. ச. ராமாமிருதம்

எரிமலை வெடித்தது. உன் கால்களை அனைத்தபடி உன்மேல் விழுந்து அவள் வீறிடுகையில், மார்த்துணி நழுவி, தலையவிழ்ந்து, மயிர் வரண்டு, உடலின் பாவாட்டல் பார்க்க சஹிக்கவில்லை.

முடியாது, முடியாது. மாட்டேன். மாட்டேன்." எனக்குச் சற்று கோபம்கூட வந்தது. என்ன முடியாது, என்ன மாட்டேன்?

    • siggy, We must face facts.” :Facts' காளி என் மேல் திரும்பினாள் என்ன Facts ஐக் கண்டுவிட்டாய்?’’

•• &api, Look!”” பாஸ்கர், உன் கண்கள் திறந்து, நீ எங்களை அடை வானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாய். உன் உள்ளங் காலைத் தொட்டேன். சூடு திரும்பிக்கொண்டிருந்தது. நாடி அசைந்தது. மிக்க பலஹீனமாய், ஆனால் நிச்சயமாக பாஸ்கர், நீ விழித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், நான் விழித்துக்கொண்டிருக்கிறேனா?

விளக்கில் சுடர் சொட சொட," என்ன பேசுகிறது?

டாண் டாண்! சுவர்க் கடியாரம் ஜயப்ரகடனம் செய்தது.

பாஸ்கர், உன் கண்கள் மூடிக்கொண்டன, நீத்திரையில். - திவாகர் ஜன்னல் கதவுகளைத் திறவுங்கள்.” நான் திரும்பியபோது அவள், தன் நிலைக்கு வேகமாக மீண்டுகொண்டிருந்தாள். ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் முகத்தில் வேர்வை ஜலகண்ட மாய்க் கொட்டியிருந்தது.

ஆகவே, எது நிஜம், எது நடக்கக்கூடியது என்பதைக் கூட நிர்ணயிக்க நாம் தகுதியில்லை.