பக்கம்:எப்படி உருப்படும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

i8 சாரிகள்-இவ்விதமான கும்பல்கள் நிறைந்துள்ள வரை தமிழ் சினிமா உருப்படவே உருப்படாது. இத்தகையவர்கள் கலையுலகக் காளான்கள். தமிழ் நாட்டைக் கெடுக்கும் புல்லுருவிகள். கலைக் கறையான் கள். தமிழியத்தை-தமிழர் கலாசாரத்தை-பாழக்கி, தமிழ்நாட்டின் பெயரைக் கெடுக்கின்ற மக்கட் மகடிகள். இவர்கள் ஒழிந்தால்தான் சினிமாக்கலை உருப்படும். 7 படிக்காத, பண்பு பெறாத , பணக்காரர்களும், நாட கக்கார்களும் சினிமாத் துறையில் புகுந்து, திட்டமற்று, ஒழுங்கு முறையற்று, இஷ்டம்போல் வாழ்வதனால்தான் சினிமாக் கலைக்கே கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, இக்கலை மாற இவர்கள் சீர்திருத்த வேண்டும். அல்

லது சினிமாத் தொழிலை விட்டுத் தொலைய வேண்டும்

அத்துடன், கல்வியறிவுள்ளவர்கள், சிந்தனையாளர் கள், திறமையுள்ள நடிகர்கள், கலைப் பசி கொண்ட வர்கள், நல்ல எழுத்தாளர்கள் படவுலகில் பிரவேசிக்க வேண்டும். படவுலகைக் கைப்பற்ற இத்தகையவர்களுக்கு பொரு ளுதவி செய்யக்கூடிய ரசிகர்கள் தேவை. கலாசாலை நாட கங்களிலும் தனிப்பட்ட கழக விழாக்களிலும் கலந்து உ ற் சாகமாக நடிக்கும் திறமைசாலிகள் நாட்டிலே ஏராளம். கலையார்வத்தால் நடிப்பிலே ஈடுபடத் தயாராக இருப்பவர் கள் எண்ணற்றோர். இத்தகைய மணிகளைத் திரட்டி நல்ல