பக்கம்:எழிலோவியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளக்கு

1

திங்களைக் கண்டு, மக்கள்
தீக்கண்டு, சக்கி கண்டு
கங்குலைப் போக்க உன்னைக்
கைக்கொண்டார் ! குகையை நீங்கித்
தங்கிய இடத்தும், சிற்றுார்
சமைத்திட்ட போதும் நீயுன்
மங்கிய ஒளியால் வாழ்வை
விளக்கினாய் ! விளக்கே! வாழி !

2


ந்தமாய், அகல்வி ளக்காய்ப்
பண்படா மங்கை நெஞ்சில்
வந்திட்ட காமம் போன்ற
மண்குட விளக்கு மானாய் !
எந்தநாள் உன்னை யன்றி
இருள்திரை கிழிக்கக் கூடும் ?
முந்தையர் அறிவே ! மக்கள்
முப்பாட்டன் சொத்தே ! வாழி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/46&oldid=1302001" இலிருந்து மீள்விக்கப்பட்டது