இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளக்கு
1
திங்களைக் கண்டு, மக்கள்
தீக்கண்டு, சக்கி கண்டு
கங்குலைப் போக்க உன்னைக்
கைக்கொண்டார் ! குகையை நீங்கித்
தங்கிய இடத்தும், சிற்றுார்
சமைத்திட்ட போதும் நீயுன்
மங்கிய ஒளியால் வாழ்வை
விளக்கினாய் ! விளக்கே! வாழி !
2
பந்தமாய், அகல்வி ளக்காய்ப்
பண்படா மங்கை நெஞ்சில்
வந்திட்ட காமம் போன்ற
மண்குட விளக்கு மானாய் !
எந்தநாள் உன்னை யன்றி
இருள்திரை கிழிக்கக் கூடும் ?
முந்தையர் அறிவே ! மக்கள்
முப்பாட்டன் சொத்தே ! வாழி !