இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
9
இடிகரைப் பரப்பில் மேட்டில்
எழுந்துமே லோங்கி நின்று
கொடுங்கடல் வாழ்வோர்க் கெல்லாம்
குறிப்போலை இரவில் தந்தாய்;
கடுவிருள் உன்னால் எங்கும்
கழிந்ததாம்; ஆனால் மக்கள்
நெடுவிருள் நீக்கி விட்டால்
நீயென்ன குறைந்தா போவாய் ?
10
உன்னிடம் பலநா ளாய்நான்
உரையாட நினைத்தேன்; இன்றே
என்னிடம் தனித்தாய்; இந்தா
இதைக்கேள்நீ: தேவைக் கேற்பப்
பொன்பொருள் உழைப்பை மக்கள்
பொதுவாக்கிக் கொண்டால் வாழ்க்கைக்
கின்னலே இல்லை; மாற்றார்
தலையிட வழியே இல்லை !
_______