பக்கம்:எழில் விருத்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வாணிதாசன்

நினைவென்றே உனையொதுக்கி
    உன்னாட்டை ஆள்கின்றார்
         நினைவில் மக்கள்;
நினைவிற்கே வரலாற்றுப்
    பெரும்புலவர் நீள்குறிப்பை
         நிலைக்கச் செய்தார்;
நினைவில்லாத் தாயகத்தின்
    நிலையெண்ணா மக்கட்கே
         நித்தம் நித்தம்
கனவாகிப் போனாயோ
    மலைக்கோட்டைக் கற்சுவரே!
         கருத்தை ஊட்டே! .......................................... 10


“முதனான்கும் காயாகிப் பின்னவைமா
தேமாவாய் முடியு மன்றே"

என்னும் 'விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.