இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 55
34 தமிழ் வளர்ப்பார்....!
நயங்கூர் உரைகள் பலசெய்வார்;
நலங்காண் வினைக்கே முழுமனதாய்
இயங்கார்; பிறர் ஆங் கெழுந்தியங்கின்
இணையார்; ஒருகால் இணைந்துவிடின்
வயங்காண் பொழுதில் பொருள் நயப்பால்
வழிப்போ வார்க்கே பழிசெயவும்
தயங்கார்; இவர்காண் தமிழ்வளர்ப்பார்!
தமிழே! இதுநின் தலையெழுத்தே!
-1964
35 எழுதிப் பிழைக்கும் இடக்கர் !
பழுதுற நூற்கள் பதித்திடு வாரும்
பதித்தவெல்லாம்
புழுதியென் றாலும் புகழ்ந்துரைப் பாரும்
புகழ்ந்தவற்றைத்
தொழுதுடன் வாங்கிப் படித்திடு வாரும்
தொலைந்துவிட்டால்
எழுதிப் பிழைத்திடு வாரோ இடக்கரும்
இந்நிலத்தே!
-1964