பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-13 விடியற் காலை, கோயிலின் எதிரே உள்ள படியில் உட் கார்ந்து கொண்டிருந்தேன்; அமைதியாக இருந்தேன். என் கண்முன்னே மகாவித்துவான் தண்டபாணி தேசிக ரும் அவரது மருமகர் குருசாமி தேசிகரும் காட்சி அளித்த னர். அவர்களைக் கண்டு நான் வியந்தேன்; என்னைக் கண்டு அவர்களும் வியந்திருக்கக்கூடும். திரு. தண்ட பாணிதேசிகரிடம் யான் மாயியைப் பார்க்க வந்ததைச் சொன்னேன். தமக்கும் அந்த அம்மையாரைத் தெரியும் என்றும் பெரியவர்கள் என்றும் திரு. தேசிகர் அவர்கள் சொன் ஞர் கள். அவர்களுடைய பெருமையை விளக்குவதாக மரு மகர் திரு. குருசாமி ஒற்றைவரிக் கதை சொன் ஞர்கள். அது வருமாறு. ஒருமுறைத் தம்மைப் பார்க்க அன்பர் ஒருவருக்கு மாயி இரு சோழிகளே எடுத்து கையில் கொடுக்க அவற்றை வாங்கிக் கொண்டு தம் வீட்டிற்குப் போன அவ்வன்பர் தமக்கு இாட்டைக் குழ்ந்தைகள் பிறந்திருப்பதைக் கண்டு வியந்து மகிழ்ந்தார்.” மாமஞரும் மருமகரும் வைத் த தயவால் அடியேன் பல் விளக்கிக் கொண்டு அவர்களோடு கடலாடச் சென்றேன்! வழியில் மாயியைப்பார்க்கலாம் என்று தேசிகர்களும் விரும் பிஞர்கள். மாயி தம் குடிசையில் கடலை நோக்கிப்படுத்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு வணங்கிளுேம். பின் னர் முக்கடல் நீராடி கதிரவன் முளைக்கும் காட்சியும் கண் டோம் தேசிகர்கள் தம் ஆத்மார்த்த பூசை செய்ய அறைக்குச் சென்றனர். நானுே நம்மாயி எந்தநாளும் உள்ளே புகுத்து வனங்காத அந்த மகாமாயியை-கன்னியக்குமரியைக் கண் ணளவில் கண்டேன். காட்சியாளர் பட்டியலில் என் பெயரையும் பதிவு செய்து கொள்ள வேண்டுமே என்ற