பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

63


பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.

“ஐயோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா” என்று அலறினான் பொம்மன்.

“பிணம் தொங்குதேடா பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு” என்று கூறினான் பொன்னன். கரியா, வரதா, காத்தா, முத்து எனக் கூக்குரல் கிளம்பிற்று. அமிர்தம், கமலம், ஆச்சி அகிலாண்டம் என்ற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று. “கூவாதே! கிட்டே போகாதே!” என்றனர் சிலர்.

“அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக் கூடாது” என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.

“ஐய்யய்யோ இது என் அக்கா புருஷனாச்சே” என்று அலறினாள் வேறொரு வீரி.

“ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டோ! அடடா? இது என்னடா அநியாயம்” என்றான் பொம்மன்.

தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும் மக்களும், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூடிவிட்டனர்.

கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட சாரதாவின் முகம் வெளுத்துவிட்டது.

அவள் புருஷன் அழுதே விட்டான்.

ஊர் முழுவதும் ஒரே அர்க்களம்தான்.

ஏன் கருப்பையா தற்கொலை செய்துகொண்டான் என்பதை ஊர் அறியாது.

வருட முடிவில், வீட்டுக் கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு மேலே துண்டு விழுந்துவிட்டது.