பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கபோதிபுரக்


புடன் அவன் மீண்டும் உளறினான். சாரதா நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே, உன்னை விடுவேனோ! ஒரு கயிறு உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுமா! என்னைவிட அக்கயிறு என்ன பிரமாதமா! வா! ராதா! வந்துவிடு!” என்று உளறினான்.

“தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார், சாரதா வந்திருக்கிறாள்” என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், “யார் சாரதாவா, இங்கேயா” என்று கேட்டுக்கொண்டே கண்களைத் திறந்தான், சாரதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் சாரதாவை இழுத்தான்.

சாரதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, “வேண்டாம் வேண்டாம் என்னைத் தொடதீர்கள்” என்றாள். பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக்கொண்டான். “மறந்துவிட்டேன் சாரதா அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரேமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது” என்று சலிப்புடன் கூறினான். சாரதா பதைபதைத்து “பரந்தாமா! தப்பாக எண்ணாதே. தான் என்னைத்தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி” என்றாள்.

புன்னகையுடன் பரந்தாமன் “நீயா பாவி, தப்பு தப்பு. சாரதா நான் பாவி, நான் கோழை, என்னால்தான் நீ துயரில் மூழ்கினாய்” என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த ‘போட்டோவை’ சாரதாவிடம் கொடுத்தான். சாரதா சிறிதளவு திடுக்கிட்டுப்போனாள். பரந்தாமனைப் பார்த்து “இந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என்மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா” என்று கேட்டாள்.