பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134



இவன் தசரத சக்கரவர்த்தி திருமகன். அதனாலேதான் இவ்வளவு லகுவாக இந்த வில்லை ஒடித்தான் என்பர் சிலர், இவன் வடிவழகு காண்பீர்! இவன் சாதாரண மனிதன் அல்லன். செந்தாமரைக் கண்ணனும் காயாம்பூ மேனியனும் ஆகிய கார்மேக வண்ணன், பாற்கடலில் துயிலும் பரந்தாமன் இவன். இவனை மனிதன் என்று சொல்லும் உலகம் அறியாமை உடையது என்பர் மற்றும் சிலர்.

𝑥𝑥𝑥𝑥

தயாதன் புதல்வன் என்பார் — தசரத சக்கரவர்த்தியின் திருமகன் என்பார் சிலர் , தாமரைக் கண்ணன் என்பார் – செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் போலும் என்பார் வேறு சிலர் புயல் அவன் மேனி என்பார்—அக்குமரனுடைய திருமேனி மேகமே என்பார் இன்னும் சிலர். பூவை பொருவும் என்பார்―அவன் திருமேனிக்குக் காயாம் பூவே பொருந்தும் என்பார் மற்றும் சிலர். மானுடன் அல்லன் என்பார் — இவன் மனிதன் அல்லன் என்பார் வேறு சிலர். (பின்ன எவன் எனில்) கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் — கயல் மீன்கள் ஒன்றுடன் மற்றொன்று பொருதற்கு இடமான திருப்பாற் கடலிலே பள்ளி கொண்ட பரந்தாமனே என்பார். உலகம் மயல் உடைத்து என்பார் — இவன் மனிதன் என்று கூறும் இவ்வுலகம் அறியாமை உடையது என்பார்.

𝑥𝑥𝑥𝑥


ம்பியைக் காண நங்கைக்கு
        ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணுந் தோறும்
        குரிசிற்கும் அன்ன தேயால்
தம்பியைக் காண்மின் என்பார்
        தவமுடைத்து உலகம் என்பார்
இம்பர் இந்நகரில் தந்த முனிவனே
        இறைஞ்சும் என்பார்.