59
“பொன் மான் உருக்கொண்டு அப் பெண் மானின் உள்ளம் கவர்வாய்” என்றான் அரக்கர்கோன்.
“அங்ஙனே ஆகுக” என்று இசைந்து சென்றான் மாரீசன்.
இராவணனும் வேறு ஒரு வழியில் சென்றான்.
◯◯
இங்கு யான் என்ன மா மாயம் இயற்றுவது – இப்பொழுது யான் செய்யத்தக்க மா மாயச் செயல் எது? இயம்புக – சொல்வாய்; என்றான் – என்று இராவணனை நோக்கக் கேட்டான் மாரீசன்; பொன்னின் மான் ஆகிப் புக்கு – பொன் போன்ற நிறங்கொண்ட ஒரு மான் ஆகி அவர்கள் இருக்கும் இடம் சென்று; அப் பொன்னை மால் புணர்த்துக – பொன் போன்ற அச் சீதைக்கு ஆசை உண்டாக்குவாயாக; என்ன – என்று சொன்னான் இராவணன். அன்னது செய்வன் என்னா – அப்படியே செய்வேன் என்று; மாரீசன் அமைத்து போனான் – மாரீசன் அதற்கு இசைத்து சென்றான்; மின்னும் வேல் அரக்கர் கோனும் – மின்னும் வேல் தாங்கிய அரக்கர்க்கரசனாகிய இராவணனும்; வேறு ஒரு நெறியில் போனான் – வேறு ஒரு வழியாகச் சென்றான்.
◯◯
தன் மானம் இலாத
தயங்கு ஓளி சால்
மின் மானமும்
மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு
போயினன் ஆல்
நன் மான் அனையாள் தனை
நாடுறுவான்.