பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

காதலால்‌ நானும்‌ இறப்பேன்‌. அதனால்‌ உன்னை நான்‌ கொன்றேனல்லன்‌ என்றான்‌.

விண்ணவர்‌ ஏவல்‌ செய்ய – தேவர்கள்‌ நான்‌ ஏவிய காரியங்களைச்‌ செய்ய; வென்ற – அவர்‌களை வென்று அடிமை கொண்ட; என்‌ வீரம்‌ பாராய்‌ – என்னுடைய பராக்கிரமத்தை எண்ணிப்‌ பாராதவளாய்‌; மண்‌ இடை – இந்த பூமியிலே; புழுவின்‌ வாழும்‌ – அற்பப்‌ புழுக்களைப்போல்‌ வாழுகின்ற; மானிடர்‌ – மனிதர்‌; வலியர்‌ என்றாய்‌ – வலியுடையோர்‌ என்று கூறினாய்‌ (இவ்வாறு என்‌ எதிரில்‌ கூறிய நீ) பெண்‌ எனப்‌ பிழைத்தாய்‌ – ஒரு பெண்‌ என்ற காரணத்தினால்‌ உயிர்‌ பிழைத்தாய்‌; அல்லை – இன்றேல்‌; உன்னை யான்‌ பிசைந்து தின்ன எண்ணுவேன்‌ – உன்னை என்‌ கைகளால்‌ பிசைந்து தின்ன எண்ணியிருப்பேன்‌; பின்னை எண்ணில்‌ – பின்‌ விளைவுகளை நோக்கி அவ்வாறு செய்தேனல்லன்‌;

(உன்னைக்‌ கொன்று தின்றால்‌ நீ இறந்து படுவாய்‌ உன்னை அடையமுடியாமல்‌) என்‌ உயிர்‌ இழப்பேன்‌ – நானும்‌ எனது உயிர்‌ துறப்பேன்‌; என்றான்‌ – என்று சொன்னான்‌.


செவிகளைக்‌ தளிர்‌ கையாலே
        சிக்குறச்‌ சேமம்‌ செய்தாள்‌;
“கவினும்‌ வெஞ்சிலைக்கை வென்றிக்‌
        காகுத்தன்‌ கற்பினேனை
புவியிடை, ஒழுக்கம்‌ நோக்காய்‌
        பொங்கு எரிப்‌ புனிதர்‌ ஈயும்‌
அவியை நாய்‌ வேட்டது என்ன
        என் சொனாய்‌ அரக்க?” என்னா.