பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130



அப்பினால் நனைந்து அரும்துயர்
        உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து ஒரு
        நிலையுறாத மென்துகிலாள்.

நீருண்ட மேகம் போன்ற அக்கார் நிற வண்ணன் இராமனை நினைக்கிறாள் சீதை. அப்படி நினைக்கும் போதெல்லாம் கண்கள் நீர் சொரிகின்றன. அதனால் அவனது ஆடை நனைந்து விடுகிறது. துயரத்தால் பெருமூச்சு விடுகிறாள். அந்த உடல் சூட்டினால் ஈரமான புடவை காய்ந்துவிடுகிறது.

***

துப்பினால் செய்த - பவழத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால் பெற்ற - கைகளோடு கால்களையும் பெற்ற; துளி மஞ்சு - நீர் தெளிக்கும் கருமேகம்; ஒப்பினான் தனை - ஒத்த இராமனை; நினைதொறும் - எண்ணும் பொழுதெல்லாம்; நெடும் கண்கள் - நீண்ட கண்கள்; உகுத்த - சொரிந்த; அப்பினால் - நீரால்; நனைந்து - ஈரமாகி; அரும் துயர் - பெரும் துன்பத்தால் உண்டாகும்; உயிர்ப்பு உடை யாக்கை - பெருமூச்சு விடும் உடலினது; வெப்பினால் - வெப்பத்தினால்; புலர்ந்து - உலர்ந்து; ஒரு நிலை உறாத - எப்பொழுதும் ஒரு நிலை அடையாத; மென் துகிலாள் - மெல்லிய ஆடையுடையவளாக இருந்தாள்.

***

அரிது போகவோ விதிவலி
        கடத்தல் என்று அஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும்
        பழியையும் பாராச்