156
எய்தினாள் பின்னும்
எண்ணாத எண்ணி ‘ஈங்கு
உய்திறம் இல்லை’ என்று ஒருப்பட்டு
ஆங்கு ஒரு
கொய் தளிர்க் கொம்பிடைக்
கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல் வையில்
தவத்தின் பெற்றியால்.
மீண்டும் ஒரு முறை சிந்தித்தாள். “நான் செய்த முடிவே சரி” என்று தீர்மானிதாள்; கிளையில் கொடி ஒன்றை எடுத்தாள். சுருக்குப் போட்டாள், தலையை நாட்டும் சமயம்.
***
எய்தினள் - அவ்வாறு அடைந்த சீதை; பின்னும் எண்ணாத எண்ணி - மீண்டும் என்ன என்னவோ நினைத்து; இங்கு உய்திறம் இல்லை - இங்கு உய்யும் வழி இல்லை; என்று ஒருப்பட்டு - ஒரு முடிவுக்கு வந்து; ஆங்கு - அங்கே இருந்த; ஒரு கொய் தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே - தளிர் கொய்யப்பட்ட கிளையில் உள்ள கொடியை இட்டு; தலை பெய்திடும் ஏல்வையில் - தலையை மாட்டும் தருணத்தில்; தவத்தின் பெற்றியால் - முன் செய்த நல்வினைப் பயனால்.
***
கண்டனன் அநுமனும்;
கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்;
மெய் தீண்டக் கூசுவான்;