பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


தருமத்தை நிலைநாட்டி, மக்கள்பால் அருள்சுரந்து வேதம் சொல்லிய நீதி முறைகளை அறிந்து உலகத்தினர் மேற்கொண்டு ஒழுகும்படி அவர்களை சன்மார்க்க நெறியிலே செலுத்தி தீயவரை அழித்து, நல்லவரைக் காத்து மீண்டும் தன் இருப்பிடம் சேர்வதன் பொருட்டு பொன்னார்ந்த தன் திருவடி துதிப்பார் தம் பிறவி அறுப்பவனாகிய திருமால் இவ்வுலகில் பிறந்துளான்.

***

தன் பொற்பாதம் ஏத்துவார் - தன் பொன்னான திருவடிகளைத் துதிப்போர்; பிறப்பு அறுப்பான் - பிறவியைப் போக்கி அருள்பவனாகியத் திருமால், அறம் தலை நிறுத்தி - தருமத்தை நிலை நாட்டி, வேதம் அருள் சுரந்து அறைந்த - வேதங்கள் கருணை கொண்டு மக்களுக்காக சொல்லிய; நீதித்திறம் தெரிந்து- நீதி முறைகளை அறிந்து. உலகம் பூண - உலகத்தினர் மேற்கொண்டு ஒழுகும்படி; செந்நெறி செலுத்தி - அவர்களைச் சீரிய வழியிலே செலுத்தி; தீயோர் - தீங்கு செய்வோரை; இறந்து உக நெறி - இறந்து ஒழிய அழித்து; தக்கோர் இடர் துடைத்து - நல்லவர் துன்பம் போக்கி; ஏக - தன் இருப்பிடம் சேர; ஈண்டுப் பிறந்தனன் - இவ்வுலகிலே பிறந்தவன்.

***

அன்னவர்க்கு அடிமை செய்வேன்
         நாமதும் அநுமன் என்பேன்
நன்னுதல் தன்னைத் தேடி
         நால் பெரும் திசையில் போந்த
மன்னரில் தென் பால் வந்த
         தானைக்கு மன்னன்; வாலி
தன் மகன்; அவன் தன் தூதன்;
         வந்தனன் தனியே என்றான்.