பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195



ஊரை நூறுங்
        கடுங்கணலுட் பொதி
சீரை நூறவை
        சேமம் செலுத்துமோ?

உனக்கு இப்பொழுது இருப்பன போல் இருபது தோள்களும், பத்துத் தலைகளும் அன்றி ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கைகளும் கூட இருந்தாலும் அவை உனக்கு நலன் தருமோ? தரமாட்டா. அவை எல்லாம் நெருப்புப் பொறியினை உள்ளடக்கிய கந்தைத் துணி போன்றனவேயாகும்.

***

பாரை நூறுவ பல் பல பொன் புயம் – உலகை அழிக்கவல்ல பற்பல அழகிய தோள்களும்; ஈர் ஐநூறு தலை உள எனினும் – ஆயிரம் தலைகளும் உனக்கு உள்ளன என்றாலும்; சேமம் செலுத்துமோ? அவை உனக்கு நலன் தருமோ (தரா) அவை; ஊரை நூறும் கடும் கணல் உள் பொதி – அவை ஊரையே அழிக்க வல்ல கொடிய கனலினை உள்ளே கொண்டுள்ள; நூறு சீரை – பல சீலைகளே ஆம்.

***

ஈறில் நாள் உக,
        எஞ்சல் இல்நல் திரு
நூறி, நொய்தினை ஆகி,
        நுழைதியோ?
வேறும் இன்னும் நகை
        ஆம் வினைத் தொழில்
தேறினார் பலர் காமிக்கும்
        செவ்வியோய்.