பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277

மீண்டு போனான் -வெறுங்கையனாக ஊர் திரும்பிச் சென்றான்.

***

இராமனின் விற்திறனால் தனியனாகிய இராவணன். நகர் நோக்கி மீண்டான். எங்கும் உள்ள அரக்கச் சேனைகளையும் திரட்டிக் கொண்டு வருமாறு தூதர்களுக்குக் கட்டளையிட்டான். மாலியவான் இராவணனின் இருப்பிடம் சென்றடைந்தான். இராவணன் அவனிடம் இராமனால் தனக்கேற்பட்ட சிறுமையைப் பற்றி கூறினான். மாலியவான் இராவணனுக்குச் சில அறிவுரைகளைக் கூறி, ‘சீதையை விடச்’ சொன்னான்.

அங்கு இருந்த மகோதரனோ கண்ணில் தீப்பொறி பறக்க, மாலியவானை நோக்கினான். ‘இப்படி சிறுமையாக சொல்லியது என்னே!’ என்று அவனை அதட்டினான். இராவணனுக்கு மென்மேலும் துர்போதனை செய்தான், இராவணனும் தன் தம்பி கும்பகன்னனை துயில் எழுப்பி அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

அதன்படி கிங்கரர் உறங்குகின்ற கும்பகன்னனிடம் சென்றனர்.

***

உறங்குகின்ற கும்ப கன்ன
        உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்ற தின்று காண்
        எழுந்திராய்; எழுந்திராய்;
கறங்கு போல விற்பிடித்த
        கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்;
        இனிக்கிடந்து உறங்குவாய்.