பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314


செல் ஒன்று கணைகள், ஐயன்
        சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை
        ஒன்றாய்த், துணிந்தனன், அரக்கன் துஞ்சி.

இராமன் என்ன செய்தான்? அவ்வரக்கன் (மகோதரன்) உடையவில்லை ஒரு பாணத்தினால் சிகைத்தான்.கவசத்தை மற்றொரு பாணத்தினால் உடைத்தான். அவனுடைய வலிமை பொருந்திய கைகளை ஒவ்வோர் பானமும் துணித்தன; மலையை ஒத்த தோளையும் ஒரு பாணத்தைக் கொண்டும், கழுத்தை ஒரே ஒரு பாணத்தினாலும் இடியையொத்த (தன்) கணைகளால் விரைவிற் போக்கிச் சிதறச் செய்தான். மகோதரன் தான் இராமனுடன் எதிர்த்து பொருது கொல்வதாகக் கூறியது பொய்யாகி, அவனே கொல்லபட்டதால், ‘சொல்லொன்றாய்ச் செய்கை ஒருவகையாகவும், துண்டுபட்டான்’ என்றான் கவி.

***

ஐயன் - இராமபிரான்; ஒன்றால் வில் - தன் ஒரு கணையால் மகோதரனின் வில்லையும்; ஒன்றால் கவசம் - ஒரு கணையால் அவனுடைய கவசம்: ஓர் ஒன்றால் - ஒவ்வொன்றால்; விறல் உடை கரம் - வெற்றி பொருந்திய கை; ஒன்றால் - ஒரு சுணையால்; கல் ஒன்று தோளும் . மலையை ஒத்த தோளும்; ஒன்றால் கழுத்து - மற்றொரு கணையால் கழுத்து (இவ்வாறு ஒவ்வொரு அம்பால் ஒவ்வோர் உறுப்பு வீதம் அறும்படி); செல் ஒன்று கணைகள் கடிதின் வாங்கி - செல்லுதல் பொருந்திய அம்புகளை விரைவில் எடுத்து; சிந்தினான் - வீசினான்: அரக்கன் - மகோதரனான அரக்கன்; செப்பி வந்த சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் - இராவணனிடம் சொல்லி வந்த மொழி ஒன்றாகவும் செயல் மற்றொன்றாகவும் ஆகுமாறு; துஞ்சி துணிந்தனன் - இறந்து உடல் பிளவுபட்டான்.